
யாழ், ஜுலை 04
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் ஓர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்போது காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.