இல்லத்தரசிகளின் தலையில் விழுந்த இடி!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் மண் அடுப்புக்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மண் அடுப்புகளின் விலைகள் தற்போது 850 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

முன்னதாக குறைந்தளவானோரே மண் அடுப்பை கொள்வனவு செய்ததாக உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

எனினும் தற்போது, அதிகளவான கேள்வி நிலவுவதாக மண் அடுப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *