இன்று (04) மற்றும் நாளை (05) நாளொன்றில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, b, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலையங்களில் காலை வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும்,
CC வலையங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும்,
M, N, O, X, Y, Z ஆகிய வலையங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு இடம்பெறவுள்ளது.
பிற செய்திகள்