நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகி செயற்பட முடியாது – விமலின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகி நாட்டில் நிலவும் நெருக்கடிகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்குப் பதிலாக எரிபொருள் விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் இன்று கவனம் செலுத்த தவறியமை குறித்து சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், கட்சித் தலைவர்கள் நிகழ்ச்சி நிரலுக்கு உடன்பட்டுள்ளனர், எனவே கவனத்தை மாற்றத் தயாராக இல்லை என்றார்.

இதேவேளை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *