வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திருகோணமலை பகுதிக்கு சுற்றுலா சென்ற போது தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப கந்தளாய் பிரதேசத்திலுள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் நேற்றிரவு எரிபொருளுக்காக வரிசையில் நின்றுள்ளார்.

இதனை அவதானித்த இராணுவத்தினர் வெளிநாட்டு சுற்றுலா பயணி சென்ற வாகனத்தினை முன்னால் எடுத்து வாகனத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
இந்த செயற்பாட்டுக்காக இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணி நன்றி தெரிவித்து அவ்விடத்திலிருந்து விடைபெற்றுள்ளார்.

பிற செய்திகள்