
கோட்டாபய, ரணில் ஆட்சியால் தான் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை என்னாகும்? 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இடம்பெற்றது.
இதன் செயன்முறை பரீட்சைகள் தற்போது 44 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகின்றது. இருப்பினும் 33 பரீட்சை நிலையங்களுக்கு ஆசிரியர்களால் கடமைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மாணவர்கள் பரீட்சைக்கு சமூகமளிக்கும் அளவும் குறைவாக உள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பெறுபேறுகளை வெளியிட தாமதமாகின்றது. கல்வி நடவடிக்கைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையும் தடைப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
பிற செய்திகள்