பொதுப் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

உயர்தரம், புலமைப் பரிசில் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், புலமைப் பரிசில் பரீட்சையை நவம்பர் 27 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கிடையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *