
கொழும்பு,ஜுலை 5
கொழும்பு, பொரளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (5) அதிகாலையில் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் கொத்தட்டுவ பிரதேசத்தில் வசித்துவந்த 66 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
இவர் தனது மகிழுந்தினுள் காத்திருந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுதவிர, பஹல்வெல்ல – ஹன்வெல்ல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் சுகவீனமடைந்து நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
அவர் ஹன்வெல்ல சுதுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரென எமது செய்தியாளர் தெரிவித்தார்.