
நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக மக்கள் வரிசைகளில் நின்று பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் .
மக்களின் சிரமங்களை கருத்திற்கொண்டு ஒர் ஒழுங்குமுறையினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் மக்களிடம் கையெழுத்துக்கள் பெற்று கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று இன்று யாழ் அரச அதிபர் மகேசன் அவர்களிடம் தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தனால் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அரச அதிபர் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
பிற செய்திகள்