நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் தொடர்பில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சனத் ஜெயசூரியா வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்
“ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்று நாம். இந்த நாட்டு மக்களைக் காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள் உங்களை அல்ல. நான் முன்பு சொன்னது போல் இந்த நாட்டு மக்களை மீண்டும் சோதித்து பார்க்காதே , பொடியில் அமர்ந்து நெருப்புடன் விளையாடுகிறாய் ! #GoHomeGota இப்போது”என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்