அரச எதிர்ப்பு போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி இதுதான்- சுமந்திரன் எம்.பி மகிழ்ச்சி!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்றையதினம் பல்வேறு அமைப்புக்கள் இணைந்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருகின்றன.

இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலீஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்,

சட்டவிரோத பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் நீக்கம்! அரகலயாவின் முதல் வெற்றி!! என தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *