முதற்கட்ட பேச்சுவார்த்தையில் பிரதமர் ரணில்!

பல கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது.

சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் விரைவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சட்டபூர்வமற்ற பிரதமர் பதவியை வகிப்பவர் விடுக்கும் எந்தவொரு கூட்டத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *