இலங்கை வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த, அடக்குமுறை ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்த தேசப்பற்றுள்ள தாய்நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு எங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என சம்பிக்க ரணவக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் குறித்து வெளியிட்டுள்ளார்.
மேலும், கோட்டாபயவை உடனடியாக கைது செய்ய வேண்டும் .
புதிய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இலங்கை மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க அனைத்து கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் ஒன்றிணைந்து இடைக்கால அரசை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்