நாடெங்கும் முழங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள் 

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலையடுத்து இளைஞர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு மற்றும் நாட்டின் பல பாகங்களில் போராட்டங்கள் இடம்பெறுவதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்றன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பதவி விலகுவதாக வெளியான தகவலையடுத்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இளைஞர் வெடி கொழுத்தி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *