ஜனாதிபதி இராஜினாமா செய்தாலும் அரசாங்கத்தை தொடர்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை- வஜிர

அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் பதவி விலக முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி விலகினால், அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் எனவும், அவ்வாறு செய்வதற்கு அரசியலமைப்பில் எந்த ஷரத்தும் இல்லை எனவும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் எம்.பி வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஊடகங்கள் உண்மைகளை தவறாகப் பிரசுரித்தமையால் தாம் ஏமாற்றமடைவதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

“ஊடகங்கள் உண்மைகளைத் தவறாகப் புகாரளித்ததால் நான் ஏமாற்றமடைகிறேன். நீங்கள் அரசியலமைப்பின் 37 வது பிரிவைப் பார்க்க வேண்டும். நாடு நிலையற்றதாக இருக்கும்போது அதை நிலைநிறுத்த எழுதப்பட்டது” என்றார்

ஜனாதிபதி இராஜினாமா செய்தாலும் எதிர்வரும் ஜுலை 13ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்தை தொடர்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *