தீவிரமடையும் போராட்டத்திற்கு மத்தியில் ரூபவாஹினியும் முடங்கியது!

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மிகத் தீவிர கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று காலை கொழும்பிலுள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட பெருந்திரளான ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பான நிலை உருவானது.

இவ்வாறான நிலையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் தங்கள் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றார்கள்.

போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்ததையடுத்து தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக அதன் ஊழியர்கள் கூறுகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *