நாடு மீண்டும் சுடுகாடாக மாறும் – சுரேஸ் எச்சரிக்கை!

இலங்கை ஜனாதிபதி இராஜினாமா செய்யாத பட்ஷத்தில் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள நிலையில் நாட்டில் பல்வேறுபட்ட கேள்விகள் எழுந்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

அவர் இன்றைய தினம் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ;

கோத்தராஜபக்ஷ ஜனாதிபதி இன்னும் பதவி விலகவில்லை எனப்து பிரச்சனைக்குரிய விடயமாகும் . அத்துடன் நாட்டினை விட்டு ரகசியமாக வெளியேறியிருக்கிறார்.

ஆகவே நாட்டில் ஜனாதிபதி இல்லாத பட்ஷத்தில் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக தற்போது பதவியேற்றுயிருக்கிறார். ஆகவே இவர் தொடர்ந்து பதவியில் இருப்பாரா ?என்ற கேள்விகள் எழுகின்றன.

ஜனாதிபதி இராஜினாமா செய்திருந்தால் பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வழி பிறந்திருக்கும் ஆனால் இராஜினாமா செய்யாமல் வெளிநாட்டில் இருப்பதன் காரணமாக பிரதமர் பதில் ஜனாதிபதி கடமையை ஏற்றுக்கொண்டு ஏற்றுக்கொண்டிருப்பது எவ்வளவு காலத்திற்கு நீளப்போகிறது என எனப்து கேள்வியாக உள்ளது.

தற்போது ரணில் கோ ஹோம் என்ற போராடடமும் ஆரம்பித்திருக்கிறது.பிரதமரின் அலுவலகத்திற்குள்ளும் மக்கள் நுழைந்திருக்கிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் பொது மக்களுடைய கோரிக்கைகைளை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ளப்போகிறாரா ?இல்லையா ?என்பது இன்னுமொரு கேள்வியாக உள்ளது .

அமைதியான புதியதொரு அரசாங்கத்தினை கொண்டு வருவதற்கு ரணில் ஒத்துழைக்க போகிறாரா ?அல்லது ராஜபக்ஷ குடும்பத்தைக்காப்பற்ற தொடர்ந்து பதவியில் இருக்க போகிறாரா?அவ்வாறு பதவியில் இருப்பதுடன் ஊடாக நாடு மிகப்பெரிய பிரச்சனைக்குள்ளும் தள்ளப்போகிறாரா?என்பதும் கேள்வியாக உள்ளது.

ஆகவே பதில் ஜனாதிபதி என்பது சடடத்தின் பிரகாரம் செய்யப்பட்டிருந்தாலும் கோத்தரஜபக்ஷ பிரதமரை பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துவைத்த பின்னர் வெளியேறி இருக்க வேண்டும்.

ஆனால் கள்ளத்தனமாக வெளியேறியிரியிருக்கிறார்.ஆகவே இலங்கையின் சுப்பிரியன் நீதிமனறத்திற்கு சென்று இந்த நடைமுறைகள் சரியானதா என ஆராயப்பட வேண்டும்.அத்துடன் ரணில் பதவி விலக வேண்டும் இல்லையென்றால் நாடு மீண்டும் சுடுகாடாக மாற்றுவதற்கு ரணில் முயற்சிப்பர் என்பது அதன் கருத்தாகும் என்றார் .

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *