புதிய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

கொழும்பு,ஜுலை 13

இலங்கையின் தற்போதைய நிலைமையானது இலங்கையின் உள்விவகார விடயங்களாகுமென ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேசாளர் maria akharova தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை ரஷ்யாவின் நட்பு நாடு எனவும், இலங்கையின் அரசியல் செயற்பாடுகள் நாட்டின் தற்போதைய சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் படி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் இருந்து இலங்கை மீள்வதற்கு புதிய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமென ரஷ்ய நம்புவதாகவும் maria akharova தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை விரைவில் வாமைக்குக்குத் திரும்புமென நம்புவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேசாளர் maria akharova தெரிவித்துள்ளார்./

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *