
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலகியதை தொடர்ந்து, ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவதில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும், பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கவும், பொதுஜன பெரமுனவின் மற்றொரு பிரிவின் ஆதரவுடன் டலஸ் அழகப்பெருமவும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
1993 மே 1 இல் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி பதவி, குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே வெற்றிடமாகியது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே அறிவித்தபடி இராஜினாமா செய்ததையடுத்து அது இப்போது காலியாக உள்ளது.
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் போது, மும்முனை போட்டி இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க இப்பதவிக்கு போட்டியிடவுள்ளார். பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதி அவருக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு தரப்பினர், பத்து கட்சிகள் கொண்ட கூட்டணி டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்படுவார்.
இரகசிய வாக்கெடுப்பில், செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேல் பெறும் வேட்பாளர்கள் ஜனாதிபதியாக வருவார்கள்.
போட்டியாளர்களில் எவரேனும் 50 சதவீதத்தை கடக்காத பட்சத்தில், எம்.பி.க்களால் குறிக்கப்பட்ட விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, 50 சதவீதத்தை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
எதிர்கால தேர்தல் அபிலாஷைகள் இல்லாத நடுநிலையான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஜே.வி.பி எடுத்துள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட வேண்டுமென அந்த கட்சி கூறுகிறது.
பிறசெய்திகள்