ஜேசிபி இயந்திரத்துடன் தயாராகும் போராட்டக்காரர்கள்! தொடரும் பதற்றம்

நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் வீதித்தடைகளை அகற்றுவதற்காக போராட்டக்காரர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து வீதித்தடைகளை அகற்ற முற்பட்ட போது அந்த முயற்சி பாதுகாப்பு தரப்பினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அப்பகுதியில் மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி முற்றாக இருளில் மூழ்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் அப்பகுதியில் பொலிஸாரால் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன், தொடர் துப்பாக்கிப்பிரயோக சம்பவங்களும் பதிவாகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *