‘இது ரணிலின் கேம்’ பாராளுமன்ற போராட்டக்காரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாராளுமன்றத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என காலி முகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவரான செயற்பாட்டாளரான ரட்டா (Ratta) என்கிற ரதிந்து சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 90 நாட்களுக்கு மேலாக பொறுமையாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இன்னும் ஓரிரு நாட்களுக்கும் அந்தப் பொறுமை தொடர வேண்டும்.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை என்பனவற்றை நாம் கைப்பற்றி இருக்கிறோம்.

இதற்கு மேலாக எதையும் நாம் கைபற்ற வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, மேலும் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காது பாராளுமன்றதுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் காலி முகத்துடலுக்கு மீள திரும்பி வரவேண்டும்.

பாராளுமன்றத்துக்கு முன்பாக போராடுபவர்கள் ரணிலின் கேம்க்குள் சிக்க வேண்டாம். இது ரணிலின் கேம் எனவும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *