காலணிகளுடன் ஆலயத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரி- ஆரம்பிக்கப்பட்டது உடன் விசாரணை..!

யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களுக்குள் பொலிஸ் அதிகாரி பாதணிகளுடன் சென்றதாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பில் உடன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இவ்விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அத்தோடு பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணை அறிக்கை திணைக்களத்தின் செயலாளரிடம் கையளிக்கப்படும்.

எனினும் இதையடுத்து செயலாளரினால் அவ் அறிக்கை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட உள்ளது எனவும் இந்த அறிக்கைக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயம் மற்றும் வல்லிபுர ஆழ்வார் ஆலயங்களுக்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் நேற்று புதன்கிழமை பாதணியுடன் பிரவேசித்த சம்பவம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி..!

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! என்ன நடந்துச்சு தெரியுமா?

Leave a Reply