நிழல் தரும் மரமாக வீதியோரங்களில் பெருகும் ஜாம் மரம்!

வட பிரதேசத்தின் வறட்சியான காலநிலைக்கு ஈடுகொடுத்து வளர்ந்து வரும் மரங்களில் ஜாம் மரமும் ஒன்றாகும்.

இந்த மரத்தை வீதியோரங்களில் நிழல் தரும் மரமாக நட்டு வளர்த்துப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

ஜாம் மரம் வளர்வதற்கு அதிக நீர்த் தேவையைக் கொண்டிருப்பதில்லை. வறட்சியான காலநிலைக்கு ஈடுகொடுத்து வளரக் கூடியது. மரத்தின் கீழே உருவாகும் கொப்புகளை வெட்டி விட்டால் ஜாம் மரம் குடை போல வளரும். இம் மரத்தின் கொப்புகளும்,இலைகளும் நெருக்கமாக வளர்கின்றன.

இதனால் நல்லதொரு நிழலைத் தருகின்றது. ஜாம் மரத்தின் பழங்களின் சுவை காரணமாக அதனை விரும்பி உண்பவர்கள் அதிகம். மரத்தின் கொப்புகள் விறகுத் தேவைக்கும் அதிகம் பயன்படும்.

தேவையில்லாவிட்டால் மரத்தை தறித்து எடுப்பதும் இலகுவானதாகும். நிழல் தரும் நோக்கத்திற்காக ஜாம் மரத்தை வீடுகளிலும் வெற்றுக் காணிகளிலும் வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *