2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது என ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
தலவாக்கலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாமல், கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் 2015 இல் முன்கூட்டியே தேர்தலை நடத்திவிட்டு நாட்டைவிட்டு ஓடிய அரசாங்கமே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளது. அன்று இருந்த நிலைமைதான் இன்றும் இருக்கின்றது.
அப்போது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் இன்று நிதி அமைச்சர். அன்று ஜனாதிபதியாக இருந்தவர் இன்று பிரதமர். எனவே, இவர்களுக்கு நாட்டை நிர்வகிக்க முடியாது. அதானால்தான், நாட்டுமக்கள் மீது சுமைகளைத் திணிக்கின்றனர்.
இன்று எமது தோட்டத்திலுள்ள தாய்மார் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சிறைசோறு திண்ணும் நிலை உருவாகியுள்ளது. எமது தாய்மாருக்காக நாங்கள் போராடுவோம். இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு முதுகெலும்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





