மாகாணசபை தேர்தல் இடம்பெற்றால் பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் என்பதனால் தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
மேலும், மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளார்கள். மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கும் நிதியை நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவே மாகாண சபை தேர்தல் நடத்தப்படுகிறது.
அத்தோடு, தேர்தலை நடத்த வேண்டாம் என வலியுறுத்தி 12 பௌத்த அமைப்புக்களின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தை அடிப்படையில், ஜனாதிபதி செயற்படுவார் என நம்புகிறோம்.
மேலும், புதிய அரசமைப்பின் ஊடாக மாகாண சபை தேர்தல் முறைமையை முழுமையாக இரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






