
வெதுப்பக உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை குறைக்கப்படுமாக இருந்தால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத் தலைவர்,கந்தசாமி குணரட்ணம் தெரிவித்தார்.
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெதுப்பாக உற்பத்தி பொருட்களின் விலையினை நாங்களாக அதிகரிக்கவில்லை. மூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாகவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவோமே வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிட்டது.
தற்போது கூட மூலப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு எரிபொருள் சீராக கிடைக்கப்பெறுமாக இருந்தால் எமது பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தயாராக இருக்கின்றோம். அதற்கு தடையாக இருக்க மாட்டோம்.
மேலும் தற்பொழுது வெதுப்பகங்ளுக்கு எரிபொருளினை பெறுவதற்கு யாழ்ப்பாண பிரதேச செயலரினால் ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நல்லூர் பிரதேச செயலகத்தினாலும் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதாவது ஒரு வெதுப்பகத்திற்கு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒரு திட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சா.சுதர்சனால் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு நல்லூர் பிரதேச செயலர் பிரிவிலும் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
எனவே அந்த திட்டத்தினை ஏனைய மாவட்டங்களிலும் அல்லது நாடு முழுவதிலும் அந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துமிடத்து வெதுபகங்ளுக்குரிய எரிபொருளினை இலகுவாக வெதுப்பக உரிமையாளர்கள் பெறக்கூடிய நிலை ஏற்படும்.
அவ்வாறான நிலை ஏற்படும் போது மக்களுக்கான சேவையினை தடையின்றி முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்