யாழ் கொழும்புத்துறை,ஹெலன் தோட்ட பகுதியில் குடிநீர் பெறுவதற்காக தூர தேசங்களுக்கு செல்லும் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலயே குடிநீர் பெற வசதியாக பூமணி அம்மா அறக்கட்டளையால் குழாய்க்கிணறு அமைத்து கையளிக்கப்பட்டது.
,பூமணி அம்மா அறக்கட்டளையின் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் அவ்வூர் மக்கள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக,பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்(ITR)பணிப்பாளருமான யாழ், தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில்,பூமணி அம்மா அறக்கட்டளையின் உதவிப் பணியாக அறக்கட்டளையின்,செயலாளரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் பொருளாளர் எஸ்.கீர்த்தனா ஆகியோரின் ஒழுங்கு படுத்தலில் குறித்த பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு குடிநீருக்கான குழாய்க் கிணறு அமைத்து இன்று வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் நிர்வாகிகளான தலைவர் தனேந்திரன்,உப தலைவர் Dr எஸ்.சவுந்தரராஜன்,இணைப்பாளர் இ. T.யோசேப்,ஆலோசகர் இ.மயில்வாகனம்,ஹெலன் தோட்ட கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவர்,N.P.சங்கா,உப தலைவர்,P.ஜெபர்ஷன்,செயலாளர்,A.ரஜீவ்,பொருளாளர்,P.எமில்ராஜ்,கணக்காய்வாளர் ,அமலதாஸ்,போஷகர்,A.மரிய கொரற்றி,ஜே/61 பிரிவு கிராமசேவையாளர் சோபனா,பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.அத்தோடு அறக்கட்டளையால் பொது மக்களுக்கு மதிய போசனமும் வழங்கி வைக்கப்பட்டது.





பிற செய்திகள்