வெளிநாட்டு நிறுவனங்களை பயன்படுத்தி நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தியை உற்பத்தி செய்வதை தாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் நாட்டின் வளங்களை டொலரில் செலுத்த தயாராக இல்லை என அத்துரலிய இரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
நாட்டில் சுதந்திரமாக கிடைக்கும் காற்றாலை மற்றும் சூரியசக்தி வெளிநாட்டு சக்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் டொலரில் செலுத்த வேண்டியதில்லை என இந்த வலியுறுத்தலுக்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளியும் காற்றும் தாராளமாக கிடைத்தாலும், அதன் பயன்பாட்டை அதிகப்படுத்தவும் ஆற்றலை உற்பத்தி செய்யவும் தொழில்நுட்பம் உள்ளவர்கள் தேவைப்படுவதாகவும், நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தக் கூடிய முதலீட்டாளர்கள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களும் நாடும் மனப்பான்மையை மாற்ற வேண்டும், அவ்வாறு செய்தால் மாத்திரமே இலங்கை ஒரு தேசமாக முன்னேற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்