மொனராகலை, படல்கும்புர பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் 10 பொலிஸ் அதிகாரிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான அதிகாரிகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
10 பொலிஸ் அதிகாரிகளும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குடாஓயா மேலதிக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டப்ள்யூ.எம். தனபால தெரிவித்துள்ளார்.






