
கடந்த ஆறு நாட்களாக மசகு எண்ணெயை தரையிறக்காமல் கப்பல் ஒன்று கடலில் காத்திருப்பதாக தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி சுமார் 100,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயுடன் இலங்கை கடற்பரப்பை வந்தடைந்த குறித்த கப்பலானது பணத்தை செலுத்தாத காரணத்தினால் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பணம் செலுத்த தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் கப்பலுக்கான தாமதக் கொடுப்பனவுகளை செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.