அனலைதீவு, எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் டக்ளஸுடன் சந்திப்பு

யாழ்ப்பாணம், ஓக. 19:

அனலைதீவு மற்றும் எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

குறிப்பாக, எரிபொருள் பிரச்சினைகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் கடல்பாசி வளர்த்தல், கடலட்டைப் பண்ணை, இறால் பண்ணை போன்றவற்றை உருவாக்குவதால் ஏற்படக் கூடிய நிலைபேறான பொருளாதார நன்மைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

மேலும், குருநகர் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படுகின்ற வலைகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றின் தன்மைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

இதன்போது நாரா நிறுவனத்தின் அதிகாரிகளும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *