அரச ஊழியர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு!

அரச ஊழியர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பரிந்துரை திட்டத்தை விரிவுப்படுத்துவது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி அரசத்துறை பணியாளர்களை உற்பத்தி ரீதியான பணிகளில் ஈடுபடுத்தல், அதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரித்தல் குறித்த திட்டங்கள் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக சுற்றறிக்கை திருத்தத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறும் அரச ஊழியர்களுக்கு, குடியுரிமை இல்லாத வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது ரூபாய் கணக்கில் பணத்தை அனுப்ப முறையான அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பணத்தை இலங்கைக்கு அனுப்புவதை உறுதிப்படுத்துவதுடன்இ வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்த அரச ஊழியர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரைவாக கண்டறிவதற்கும் வழியேற்படுத்தப்படவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *