மன்னார் தலைமன்னார் பகுதியில் நிவாரண பொருட்களை பெற உரித்தான தகுதியை பூர்த்தி செய்யாத குடும்பம் ஒன்றிற்கு நிவாரண பொருள் வழங்காத கிராம சேவகரை திட்டமிட்டு பணம் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்ய வைத்த சம்பவம் ஒன்று மன்னார் தலைமன்னார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தலைமன்னார் கிராமம் மேற்கு கிராம சேகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவர் நிவாரண பொருள் பெறுவதற்கு என 10,000 ரூபா லஞ்சம் கோரியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வினரால் நேற்று வியாழக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இந்திய அரசினால் பின் தங்கிய குடும்பங்களுக்கு என வழங்கப்பட்ட அரசி பகிர்தலின் போது குறித்த நிவாரணம் பெறுவதற்கான நிபந்தனைகளுக்கு உட்படாத குடும்பங்களுக்கு குறித்த கிராம சேவகரினால் அரசி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் குறித்த நிவாரண பொருள் கிடைக்காத குடும்பம் ஒன்று கிராம சேவகரை பழி தீர்க்கும் விதமாக தனது தம்பியின் மனைவியை பயன்படுத்தி கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் நிவாரணத்தை பெறுவதற்கு கிராம சேவகர் 10.000 ரூபா இலஞ்சம் கோரியதாக இலஞ்ச ஆணைக்குழுவில் முறையிட்டு கிராம சேவகரில் மேசையின் கீழ் பணத்தை வைத்து விட்டு கிராம சேவகரை கைது செய்ய வைத்துள்ளதாக தலைமன்னார் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கருத்தின் படி கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் நிவாரண பொருள் மாதத்திற்கு இரண்டாயிரம் ரூபா வீதம் 10 மாதங்களுக்கு 20000 ரூபா ஆகும். குறித்த நிவாரணம் மாதம் மாதம் வழங்கப்படும்.
இவ்வாறு 10 மாதங்கள் பெறும் நிவாரணத்திற்கு 10,000 இலஞ்சமாக யாரும் வழங்குவார்களா ? அல்லது 10000 லஞ்சம் கோருவார்களா? என கேள்வி எழுப்புகின்றனர்.
அது மட்டுமல்லாமல் கிராம சேவகரின் கையில் பணம் இல்லாத நிலையில் மேசையின் கீழ் இருந்த பணத்தை எடுத்து அது இலஞ்சமாக பெற்ற பணம் என கூறி கிராம சேவகரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எவ்வாறு கைது செய்துள்ளது என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பகுதி கிராம மக்கள் நேற்று (18) குறித்த கிராம சேவகரை கைது செய்து கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் குறித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டு நேற்று இரவு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தனக்கு இவ் வழக்கில் பிணை வழங்க முடியாத காரணத்தினால் கொழும்பு நீதிமன்றத்தில் 24 திகதி குறித்த கிராம சேவகரை முன்னிலைபடுத்துமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பம் முன்னதாகவே பல முறை பொய்யான முறைப்பாடுகள் வழங்கி வந்துள்ளதாகவும் அதே நேரம் தங்களுடன் முரண்படும் பலரை தலை மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உதவியுடன் போதை பொருள் வைத்து லஞ்சம் வாங்குவது போன்று சித்தரித்தும் கைது செய்ய உதவுவதாகவும் தலைமன்னார் பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அது மாத்திரம் இல்லாமல் ஒரு முறை மாதாந்த கொடுப்பனவில் சலவை இயந்திரத்திரம் வாங்கி மாத தவணை பணம் கட்டாத நிலையில் சலவை இயந்திரத்தை பறிமுதல் செய்ய வந்த ஊழியர்கள் சலவை இயந்திரத்தில் இருந்த பணத்தை களவு எடுத்ததாக பொய்யான முறைப்பாடு மேற்கொண்டு சலவை இயந்திரத்திற்குள் பணம் வைப்பது போன்று (CCTV) கேமராவில் பாதிவாகுமாறு வீடியோ பதிவு செய்து அதை ஆதாரமாக பொலிஸ் மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பி பிழையான தகவலை குறித்த குடும்பம் வழங்கிய நிகழ்வும் இடம்பெற்றது.
-இந்த நிலையில் கிராம அலுவலரை உண்மைக்கு புறம்பாக லஞ்சம் வேண்டியதாக கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து கைது செய்ய காரணமாக இருந்த குறித்த பெண்ணின் வீட்டை நேற்றைய தினம் மாலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.




பிற செய்திகள்