மட்டக்களப்பு -கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றினைந்த மாணவர்கள் பேரணியாக பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் வழியே பேரணியாக சென்று பிரதான வீதி ஓரத்தில் அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 16மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

சுமார் 01 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின் கலைந்து சென்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *