யாழில் அலுவலக அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் கடைகளில் விசேட சோதனை

யாழ், ஓக 20

அதிகூடிய விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வது, மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்துவது தொடர்பில் யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவலக அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வர்த்தக நிலையங்கள், சுப்பமாக்கெட் நிலையங்களுக்கு விஜயம் செய்து அதிகூடிய விலைக்கு முட்டை விற்பனை தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் அதிகூடிய விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *