எகிறும் மீன்களின் விலை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து தொழிற் துறைகளுமே பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கடற்றொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது .

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதற்கு மண்ணெண்ணெய் அதிகமாக தேவைப்படுவதனால் தற்போது கடற்றொழில் ஈடுபடுவது மிகவும் குறைவடைந்துள்ளது.

இதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தையில் மீன்களுக்கான கேள்வி அதிகரிக்கப்படுவதோடு மீன்களின் விலைகளும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டுவதில்லை. அதிலும் மீன்களை கொள்வனவு செய்யும் மக்களும் தங்களது தேவைகளுக்கு குறைவான வகையிலே மீன்களை கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மீன்களின் விலை அதிகரிப்பு குறித்து சாதாரண மக்கள் அதிருப்தி தெரிவிப்பதை போலேவே மீன் வியாபாரிகளும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *