புத்தளத்தில் கிராம மற்றும் நகர் பகுதிகளில் இன்று காலை முதல் முட்டைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் சிவப்பு மற்றும் வெள்ளை முட்டைகளுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவித்து நேற்று (19) நள்ளிரவு முதல் விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் இன்று இவ்வாறு முட்டைக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், நகர் பகுதிகளில் உள்ள ஒரு சில வர்த்தக நிலையங்களில் வெள்ளை முட்டைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை 60 ரூபா முதல் 65 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் நுகர்வோரான மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், பழைய இருப்பில் இருந்த குறிப்பிட்ட எண்ணிக்கைகளைக் கொண்ட முட்டைகள் மாத்திரமே இன்றைய தினம் இவ்வாறு பழைய பழைய விலைக்கு விற்பனை செய்ததாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எனினும், திங்கட்கிழமை முதல் அரசாங்கம் குறிப்பிட்ட புதிய விலைக்கு முட்டைகள் விநியோகம் செய்ய இருப்பதாக முட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரியப்படுத்தியுள்ளதாகவும் வர்த்தக நிலையை உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.
சிவப்பு முட்டை 45 ரூபாவுக்கும், வெள்ளை முட்டை 43 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் கட்டுப்பாட்டு விலை அறிவித்து நேற்று (19) நள்ளிரவு விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்