நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவரும்”நமது ஈழநாடு” பத்திரிகையின் பணிப்பாளருமான சி.சிவமகாரஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
முன்னதாக தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்திலுள்ள சி.சிவமகாரஜாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைவர் உமாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், வடமாகாண ஒய்வுநிலை மேலதிகக் கல்விப் பணிப்பாளர் செல்வின், யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை திட்டமிடல் பிரிவு விரிவுரையாளர் கபிலன், வலிகாமம் கல்விவலய ஆசிரிய ஆலோசகர் மகாலிங்கசிவம், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ரதிகுலன் உட்பட கூட்டுறவு பணியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் கூட்டுறவாளர் கௌரவிப்பு, பணியாளர் கௌரவிப்பு என்பன இடம்பெற்றதுடன் விருது வழங்கலும் இடம்பெற்றது.
2006 ஓகஸ்ட் 20 ஆம் திகதி சி.சிவமகாராஜா தெல்லிப்பளையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.






பிற செய்திகள்
- அத்தியாவசிய பொருட்களின் விலை வீழ்ச்சி; எனினும் நுகர்வோருக்கு பயன் இல்லை!
- கோட்டாவின் வீட்டை சுற்றி விசேட பாதுகாப்பு; பொலிஸ் மா அதிபர் உத்தரவு!
- இலங்கையில் உச்சத்தை தொட்ட காணி விலைகள்!
- IMF குழு மீண்டும் நாட்டிற்கு விஜயம்!
- கோட்டாவிற்கு 8 அடுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்! ஜனாதிபதியிடம் பஸில் கோரிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka