திருமலையில் சிவில் செயற்பாட்டாளர்களுக்கான வதிவிட பயிற்சி!

அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் (AHRC) சிங்கள மொழிமூலமான ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கான United Nations System  தொடர்பான 2 நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சி நெறி திருகோணமலை சர்வோதயம் பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது. 

இப்பயிற்சியின் முதல்நாள் ஆகிய இன்று 20.08.2022  40 பேர்   (ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள்) ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

இப்பயிற்சி பட்டறையானது சிங்கள மொழிமூலமான ஊடகவியலாளர்களின் ஐக்கியநாடுகள் சபை தொடர்பான தெளிவு மற்றும் ஆளுமை விருத்தியினை ஏற்படுத்தும் வகையில் இப்பயிற்சி பட்டறை AHRC நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தி நடாத்தப்படுகின்றது.

இப்பயிற்சியின் வளவாளராக மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கிபெர்னாண்டோ அவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன் திருகோணமலை மற்றும் கந்தளாய் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். 

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *