யாழ். பல்கலையில் கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடந்த திட்டமிடப்பட்டதா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் கட்டட திறப்பு விழாவின் போது தமக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கட்டட திறப்பு விழாவில் தாம் பங்கேற்கவில்லை என தெரிவித்த அவர்,

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் குறிப்பிட்டார்.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட சுசில் பிரேமஜயந்தவுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் கட்டடத்தை திறப்பதற்கு மாத்திரமே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் செயற்பாடுகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் திறந்து வைக்கப்படுவதாகவும், கல்வி செயற்பாடுகளுடன் தொடர்புடைய எவரேனும் கட்டடத்தை திறந்தால் தமக்கு பிரச்சினை இல்லை எனவும் அரசியல்வாதி ஒருவரை திறக்க வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆகியோர் நிகழ்வை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேற முயற்சித்த போதிலும் மாணவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

கல்வி அமைச்சின் செயலாளரிடம் மாணவர்கள் தமது மகஜரை கையளித்தனர். இதனிடையே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமைக்கான காரணம் தொடர்பில் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

தாமதமாக வருகை தந்ததாகவும் வட மாகாண அமைச்சர் ஒருவர் இருக்கும் நிலையில், தான் திறந்து வைக்க வேண்டியதில்லை எனவும் அவர் பதிலளித்திருந்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *