அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள்-கோமகன் வேண்டுகோள்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பேசுபொருள்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலே நாங்கள் தொடர்சியாக குரல் உயர்த்தி வந்து கொண்டு இருப்பதற்கு காரணம் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்படட 46 தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை விடயம் பிரதானப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக உள்ளது என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

46 தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களில் 10 வழக்குகளில் 22 பேருக்கு தொடர்சியாக வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது.அதே நேரத்தில் 24 பேர் தண்டனை விதிக்கப்படடவர்களும், மேன்முறையீடு செய்யப்பட்டவர்களுமாக,பெண் அரசியல் கைதியும் ஒருவர் உள்ளடங்குகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து அவர்களது விடுதலைக்கான கோரிக்கை மனுக்களை சமர்பிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு சந்திப்பினை மேற்கொண்டு 46 பேரினதும் பெயர் பட்டியலை கையளித்திருந்தோம்.

அதன் தொடர்சியாக வட மாகாணத்தின் ஆளுநர் அவர்களையும் தொடர்பு கொண்டு பெயர் பட்டியல் அனுப்பி வைத்திருந்தோம்.அவர்கள் ஜனாதிபதிக்கு குறித்த பட்டியலை அனுப்பியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்கள்.அந்த கடித்தின் பிரதி விக்கேஸ்வரன் எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் அதன் தொடர்சியாக நீதி அமைச்சர் அவர்கள் தற்போது கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கின்றார். அதாவது அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தற்போது விடுதலை செய்வதாக ஊடகங்களுக்கு ஊடாக தெரியப்படுத்திய செய்தி கிடைத்துள்ளது. இவரது கருத்துக்களில் எமக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது

இந்த வருடம் எப்பிரல் மாதம் புதிய மகசின் சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி ஆலோசனை சபையின் தவிசாளர் நிதி அரசர் அசோகா டி சில்வா மற்றும் சோசிர்லல் ஜெனரல் சுகத கம்லக் ஆகியோர் சென்று பயங்கர வாத தடைச்சட்டிடத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுடிருப்பவர்களது வழக்குகள் எவையும் தாக்கல் செய்யப்படாதவர்களை மாத்திரமே ஆராய்வதற்குரிய அதிகார எல்லைகள் தங்களுக்கு இருப்பதாகவும் வழக்குகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கும் ,நடந்து தண்டனை அனுபவித்து கொண்டிருப்பவர்களுக்கும் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் தங்களிடம் இல்லை என்று தெரியப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், நிதி அமைச்சர் தெரியப்படுத்தி இருக்கின்ற முக்கியாமான விடயம் என்னவென்றால் சிறு குற்றம் சாட்டப்பட்டு்ள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ,நீதியரசர் தலைமையிலான ஜனாதிபதி ஆலோசனை சபையின் பரிந்துரைக்க காத்திருப்பதாக தெரியப்படுத்தி இருந்தார்.

இக் கருத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதாவது அண்மைக்காலமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படடவர்கள்,சமூக வலைத்தளங்களில் மாவீரர்களது படங்கள் ,தேசிய தலைவர்களது புகைப்படங்கள் என்பன வைத்திருந்ததாக கைது செய்யப்படடவர்களின் தொடர்ச்சி, தொடர்ந்து கொண்டு இருக்கிறது அவ்வாறானவர்களினை விடுதலை செய்வது தொடர்பாக எடுக்கின்ற முயற்சியா என்கின்ற கேள்வி எழுகின்றது.

உண்மையிலே நிச்சயமாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.குறிப்பாக 2019 இற்கு பின்னர் 112 தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்படடவர்கள் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது .இருந்தாலும் பிணை வழங்கப்பட்டவர்களையும் சேர்த்து அரசியல் கைதிகளை விடுதலை செய்து விட்டோம் என்ற தோற்றப்பாட்டை காட்ட முயற்சி செய்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது

எனவே இதே கூற்று 2015 ஆம் ஆண்டும் நிதித்தியமைச்சராக இருக்கின்ற வியாதிஹாச ராயபக்ச அவர்களும் இதே கூற்றை தெரிவித்திருந்தார்.ஆனால் தொடர்சியாக தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருக்கின்றார்கள்.இது ஒரு ஏமாற்று வேலையாகவே பார்க்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் முதலில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பட்ஷத்தில் தான் நல்லிணக்கத்தின் தொடக்க புள்ளி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் ஏற்படும்.

மேலும் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற எங்களுடைய அமைப்பை சேர்ந்தவர்கள்,அதே நேரத்தில் 360 நபர்கள் கருப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் ஆகவே எமது தமிழ் அரசியல் கைதிகள் ஏன் விடுவிக்கப்பட முடியாது ?

மேலும் நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்தவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார்.அவருக்குள்ள அதிகாரம் ஒரு தண்டனை பெற்றவரினை விடுவிக்க முடியும்.ஆகவே அதிகாரங்களில் இருப்பவர்கள் நினைத்தால் இவர்களை விடுவிக்க முடியும்.

எனவே பாதிக்கப்படட பெற்றோர்களின் கண்ணீரை துடைக்கும் முதல் படியாக இருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது குரலற்றவர்களின் குரலின் செயற்பாடாக இருக்கிறது.ஆகவே மனிதாபிமான அடிப்படையில் உறவுகளோடு ஒன்றித்து இருப்பதற்கான சூழலை உருவாக்கி தருமாறு ஜனாதிபதியிடம் கேட்டு கொள்கின்றோம். என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *