நாடளாவிய ரீதியில் முட்டை விலை இன்று திங்கட்கிழமை முதல் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முட்டை விலை குறைக்கப்படவில்லை என்பதுடன் மன்னாரில் முட்டை விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு என முட்டைகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது முட்டைவிலை குறைப்பு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று முதல் முட்டையின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்திருந்தது.

இருந்த போதிலும் முட்டையில் விலை குறைக்கப்படவில்லை என்பதுடன், முட்டை விற்பனைக்கு சந்தையில் வரவில்லை என உள்ளூர் முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்
அரசாங்கம் கோழிகளுக்கான தீண்களின் விலையை முதலில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் முட்டை விலை மாத்திரம் இன்றி கோழி இறைச்சியின் விலையும் குறைவடையும் என உள்ளூர் கோழி மற்றும் முட்டை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நாள் நிலவரப்படி ஒரு கிலோ பிரொஜிலர் கோழி இறைச்சி 1600 ரூபாவாகவும் ஒரு வெள்ளை முட்டையின் விலை 70 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பிற செய்திகள்