சீன கப்பல் விவகாரம்..! சிறிலங்காவில் இருந்து வெளியேறுகிறது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, இன்று (22) மாலை 4 மணிக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

ஜூலை 14 ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்ட இந்த ஆய்வுக் கப்பலானது, கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்பும் நோக்கத்தில் உத்தியோகபூர்வமாக நுழைந்தது.

19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து இந்த கப்பல் வெளியேறவுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு முன்னர் அறிவித்ததிருந்தது. இருபினும், இரண்டு நாட்களின் பின்னர் இன்று புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *