மின்வெட்டு இடம்பெறாது கட்டணமும் அதிகரிக்காது – அமைச்சர்

நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் தொடர்ந்தும் மின் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் காமினி லொகுகே உறுதியளித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், மின்சார விடயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என தெரிவித்தார்.

மின்சாரம் வழங்கும் திறன் தங்களிடம் உள்ளது என்றும் மின்சாரத்திற்கான கட்டணத்தையும் உயர்த்த மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சபுகஸ்கந்த மூடப்பட்டுள்ளது, ஆனால் இந்த ஆண்டு நாங்கள் 50% நீர் மூலமும் 50% நிலக்கரி மூலமும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக அவர் கூறினார்.

கடந்த வருடம் மின்சாரத்தினால் ஏற்பட்ட இழப்பு 35 பில்லியன் ரூபாயாக இருந்த போதிலும் அதனை 5 பில்லியனாக குறைத்துள்ளதாகவும் அமைச்சர் காமினி லொகுகே குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *