ட்டக்களப்பில், வனவளத்தினைக்களம் கோராவெளி, வட்டவான் போன்ற கிராமங்களில், அத்துமீறி வன இலாகா, விவசாய காணிகளில் மரநடுகை செய்வதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
தங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்த காணிகளை வன இலாகா துறையினர் திட்டமிட்டு சூறையாட முற்படுவதாகவும் இதனால் பாரிய பின்விளைவுகள் ஏற்படும் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பலமுறை அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதன்போது, தங்களது ஜீவனோபாயத்தை அழிப்பாத உங்களது கிழக்கு மீட்பு என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரை கேள்வி ஆகட்கும் விதமான பதாதைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

