
நாட்டில் இன்ஃபுளுவென்சா மற்றும் காய்ச்சல் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மிகவும் சாதாரணமானது, ஆனால் கொவிட் -19 தொற்றாளர்களின் அதிகரிப்பு மிகவும் எதிர்பாராதது என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் கொவிட்-19, டெங்கு காய்ச்சல் மற்றும் பிற வைரஸ் தொற்றுகள் உள்ள நோயாளர்கள் பலர் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
1,000க்கும் குறைவான கொவிட்-19 தொற்றாளர்கள் இன்னும் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் விசேட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட் நோயாளிகள் வீட்டு பராமரிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அதிகமான நோயாளிகள் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை மொத்தம் 50,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கால பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சமூகத்தில் இன்ஃபுளுவென்சா மற்றும் காய்ச்சலால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான தொற்றாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிய கொவிட்-19 சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கொவிட் நோயாளிகள் தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதை நாங்கள் பரிந்துரைக்கவில்லை, இது தடுப்பூசி திட்டங்களில் நடைமுறையில் இல்லை, மேலும் இது எந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் கொவிட் வைரஸுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்