<!–
இந்தியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் அது தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுக்கான் அறிவித்துள்ளார்.
இதன்படி பாடசாலைகள் முழு அளவில் இயங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள் யாவும் 100 சதவீதம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் நிறுவனங்களில் வேலை செய்யும் உறுப்பினர்களும், வாடிக்கையாளர்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






