அரச சேவை ஆட்சேர்ப்பு நிறுத்தம்! பரீட்சை முடிவுகளும் இடைநிறுத்தப்படும்!

அரச சேவை ஆட்சேர்ப்பு பரீட்சைகள் எதனையும் நடத்த வேண்டாம் எனவும் இதுவரை நடைபெற்ற ஆட்சேர்ப்பு பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிட வேண்டாம் எனவும் நிதியமைச்சு பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேற்று (23) அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாடசாலைகளில் உள்ள அழகியல், மனையியல் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாதுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும், பெறுபேறுகள் வெளியாகும் பட்சத்தில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *