தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு மீன்பிடி துறையில் புதிய வேலை வாய்ப்புகள்!

நேற்றிரவு 124 பேர் கொண்ட இலங்கையர்கள் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளனர், இது நாட்டில் வேலைக்காகச் செல்லும் 732 ஆவது குழுவாகும்.

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உற்பத்தித் துறையில் வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“உற்பத்தித் துறையில் அதிகளவிலான தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப முடியும் என்ற போதிலும், கடந்த காலங்களில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.

இது தொடர்பில் கொரிய மனிதவளத் துறையின் பணிப்பாளருடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி எதிர்காலத்தில் மீன்பிடித் துறையில் 1047 வேலை வாய்ப்புகளை இலங்கை பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி வேலைத் துறைக்கான பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும். அதற்கான விண்ணப்பங்களை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply