கோழி இறைச்சி விலையில் திடீர் வீழ்ச்சி

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக முட்டை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கோழிகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 700 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் முட்டையின் பல்வேறு விலைகள் காரணமாக, முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அரசாங்கம் அண்மையில் வர்த்தமானியை வெளியிட்டது.

இதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சில உடன்பாடுகள் ஏற்பட்டாலும், அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைக்கு சந்தையில் முட்டை விற்பனை செய்யப்படுவதில்லை என நுகர்வோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *